Tuesday 28 April 2020

தென்னமெரிக்காவில் ஒரு தமிழ்ப் பிரதமர் ? | A Tamil Prime Minister in South America ?

காலனித்துவ ஆட்சியின்போது பெரும்தொகையான தமிழர்கள் உலகத்தின் பெரும்பாலான பாகங்களுக்குக் குடிபெயர்ந்தது , எமக்குத் தெரிந்த விடயமே. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ் மற்றும் பிஜி  போன்ற நாடுகளில் கணிசமான அளவு தமிழ் பேசும் வம்சாவளி மக்கள் வாழ்ந்துவருவது நாம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் கரும்புத் தோட்டத் தொழிலாளர்களாக காரேபியான் தீவுகள் மற்றும் தென்னமெரிக்க நாடுகளுக்கு டச்சுக்காரர் மற்றும் பிரிட்டிஷ்காரர்களால் கொண்டுசெல்லப்பட்ட  தமிழர்கள் பற்றி நாம் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. லத்தின் அமெரிக்கா நாடுகளான சூரினாம் , பிரிட்டிஷ் கயானா மற்றும் பிரெஞ்சுக் கயானா போன்ற நாடுகளில் ஒட்டுமொத்தமாக 3 லட்சத்துத் 90 ஆயிரம் இந்திய வம்சாவளி மக்கள் வாழுகின்றனர். 2015ம் ஆண்டுக்குக்  கணக்கெடுப்பின் படி கஜானா நாட்டின் மொத்த சனத்தொகையில்  கிட்டத்தட்ட  35 வீதமான மக்கள் இந்து மதத்தையே பின்பற்றுகின்றனர். இவர்களில் கணிசமானோர் தமிழ் வம்சாவளியினரேயாவர்.

நாம் இதுவரை கேள்விப்பட்டிராத நாடுகளில் எம்மின வம்சாவளியில் வந்தவர்கள் தலைமைத்துவப் பொறுப்பில் இருப்பதென்பது , எம் இனத்தின் பெருமையைப் பறைசாற்றும் ஒன்றாகும்.


கயானா நாட்டின் அமைவிடம் 
கயானாத் தமிழ் வம்சாவழிப் பெண்கள்
1860 களில் கரும்புத் தோட்டங்களில் வேலை புரிவதற்காக ,  பிரித்தானிய அரசாங்கம் பெரும் தொகையான ஹிந்துஸ்தானிகள் மற்றும் தமிழர்களை கயானா நாட்டிற்கு அழைத்துச் சென்றது. சனத்தொகை குறைவான குடியேற்ற நாடாக கயானா காணப்பட்டதால் , இந்திய வம்சாவளியினரும் இந்து சமயமும் கஜானா நாட்டில் செல்வாக்குச் செலுத்தின. 
இன்றைய நவீன கயானா நாட்டின் அரசாங்கத்தில் 8வது  பிரதமராக பதவியில் இருப்பவர் தமிழரான "மோசஸ் வீராசாமி நாகமுத்து"(Moses Veerasammy  Nagamootoo)என்பவரே. 2015 தொடக்கம் இன்றுவரை அதே பதவியைத் தொடர்கிறார். 
கௌரவ . மோசஸ் வீரசாமி நாகமுத்து 
நவம்பர் 30 , 1949ல் , கஜானா நாட்டின் Berbice மாவட்டத்தின் Whim எனும் சிறிய கிராமத்தில் பிறந்த இவர் தனது பாடசாலைக் கல்வியின் பின்னர் ,  ஒரு ஆசிரியராகப் பணிபுரிந்து ,  பின்னர் ஊடகவியலாளரானார்.தனது உயர் கல்வியை முடித்த பின்னர் , ' De Edwards  /  Rosignal Highschool ' என்ற உயர்நிலை கல்வி சாலைகளை 1960களில் நிறுவினார்.சட்டத்தரணியாகவும் பணியாற்றிய இவர் ,  பொருளியல் மற்றும் பிரித்தானிய அரசியலமைப்பு போன்ற பாடங்களையும் மிகுந்த ஊக்கத்தோடு கற்பித்து வந்தார்.இவருடைய மாணவர்களில் ஒருவர் ,  அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சிறந்த பேராசிரியராகத் திகழ்வது ஒரு சிறப்பம்சம் ஆகும்.

தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நாகமுத்து 
1992ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று , முதன்முதலாகப் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த இவர் , தகவல்த் தொடர்பாடல் அமைச்சராகவும் உள்நாடு விவகார அமைச்சராகவும் பதவி வகித்தார்.
நாகமுத்து வெளியிட்ட புத்தகம். 
(மீன்பிடிக் கிராமத்தில் ஒரு தமிழன் )
2000ம் ஆண்டில் தனது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய இவர் , 2011ம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் செயற்பட்டார்.
2008ம் ஆண்டில் நடந்த மக்கள் முற்போக்குக் கட்சியின் மாநாட்டில் அந்தக் கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட நாகமுத்து ,  2011ல்  தனது கட்சியில் இருந்து விலகி , எதிரணிக் கூட்டணியுடன் இணைந்து , கஜானா தேசத்தை புதிய பாதையில் இட்டுச் செல்ல பாடுபட்டார்.மே மாதம் 2015ல் நடைபெற்ற தேர்தலில் எதிரணி பாரிய வெற்றியைப் பெற்றுக்கொண்டதன் விளைவாக நாகமுத்து பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றார்.
உலகின் முதலாவது தமிழ்ப் பிரதமரான நாகமுத்துவிற்கு தமிழ்நாட்டில் கௌரவ கலாநிதிப் பட்டம் 2016ல் வழங்கப்பட்டது 
எவருமே பெரிதாக அறிந்திராத கயானா நாட்டில் மீன்பிடிக் கிராமம் ஒன்றில் பிறந்த தமிழன் ஒருவன் அந்த நாட்டு அரசியலில் முக்கிய புள்ளியாக இருப்பதென்பது மாபெரும் சாதனையே ஆகும்.அது மாத்திரமில்லாமல் உலகின் முதலாவது தமிழ்ப் பிரதமர் என்ற பெருமையையும் நாகமுத்துப் பெறுகிறார்.


உத்தியோகபூர்வ இந்தியா விஜயம் 
இந்தச் வீரத் தமிழனின் முயற்சிக்குக் கிடைத்த கௌரவத்தையும் பெருமையையும் எம்மவர் மத்தியில் பகிர்வதன் மூலம் நாம் எம் இனத்தின் பிற்போக்கான பழைமைவாத சிந்தனைகளில் இருந்து விடுபட்டு ,  நாமும் முன்னேறி,  பிற மக்களையும் முன்னேற்றுவோம். 


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home