Saturday 31 October 2020

After Long time

Hello After long time

There are people we can laugh with, cry with and depend on with utmost degree of faith.
Friends make it easier for us to go through hardships and struggles in life.
They provide a shoulder for us to cry on.

Wednesday 9 September 2020

2ம் உலக மகா யுத்தத்தில் பங்குபற்றி சாதனை புரிந்த ஒரே ஈழத்தமிழர்

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பணியாற்றிய வரும் பிரித்தானியா விமானப் படையில் பணியாற்றிய வருமான ஒரே தமிழரான உடுவிலை பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் செல்லையா இரத்தின சபாபதி அவர்கள் தனது நூறாவது பிறந்த தினத்தை திருகோணமலையில் உள்ள அவரது தங்கு விடுதியில் கொண்டாடினார்.






ஆனந்தாக் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்  இந்துக் கல்லூரி களில் கல்வி பயின்ற போதும் அவரது விளையாட்டுப் போக்கினால் பெற்றோருக்கும் இவருக்கும் ஒத்து வராத காரணமாக  வீட்டை விட்டுப் புறப்பட்டு பதினெட்டுப்  பேர்களில் ஒருவராக பிரித்தானியா விமானப் படைக்கு தெரிவு செய்யப்பட்டு 1941ம்.ஆண்டு இலண்டனுக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவர் பெயர் சி. கே. பதி என மாற்றப்பட்டது. மேலாதிகப் படிப்பிற்காக ஒரே ஒரு தமிழராக கனடாவிற்கு அனுப்பப்பட்டார். படிப்பு முடிந்தபின் மறுபடியும் இலண்டன் வந்து பின்னர் யுத்தத்தில் பணி புரிந்தபோது மிகவும் கடினமான விமானங்களை ஒட்டி, சாதனை புரிந்தார். ஒரு சமயம்nபிரான்ஸ் கடற்கரை ஓரமாக ஒரு ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலை மூழ்கடித்து சாதனை படைத்தார். 1944ம் ஆண்டு போர் பதக்கம் கிடைக்கப் பெற்று கௌரவிக்கப்ப்ட்டார்   போர் முடிவிற்கு வந்த பின்பு இங்கிலாந்தில் கடல் பிராந்திய காவல் துறையில் சில காலம் பணி புரிந்து விட்டு தாயகமான இலங்கைக்குத் திரும்பினார். இங்கு இந்திய விமான சேவையில் காப்டனாக 27 வருடங்கள் பணியாற்றினார். ஓய்வு பெற்றபின்பு சில காலம் இலங்கை விமானத் துறையில் பணியாற்றிவிட்டு திருகோணமலையில் உள்ள நிலாவெளியில் ஒரு விடுதியை ஆரம்பித்து நடத்திவருகிறார். இது போல பல தமிழர்கள் குறிப்பாக ஈழத்தமிழர்கள் அன்று முதல் இன்று வரை வெளிநாடுகளில் பல்வேறு சாதனைகளை புரிந்து, பல்வேறு விசேட பதவிகளை புரிந்து, பேரோடும் புகழோடும் இலை மறை காய்களாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை இனம் கண்டு, பழைய பதிவுகளை ஆராய்ந்து, தற்போதுள்ளோரை கண்டுபிடித்து ஆவணப் படுத்த வேண்டிய கடமை எங்கள்  தலைமுறைக்கு உண்டு!

Thursday 6 August 2020

தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும்



தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும் பற்றிய ஒரு பார்வை. கைதடி, நாவற்குழி, மறவன்புலவு, தனங்கிளப்பு, சாவகச்சேரி, மட்டுவில், மீசாலை, சரசாலை, மந்துவில், எழுதுமட்டுவாழ், மிருசுவில், உசன், கச்சாய், கொடிகாம்ம்,நுணாவில், சங்கத்தானை முதலான ஊர்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட 90 சதுர மைல் பரப்புள்ள வட்டாரமே ‘தென்மராட்சிப் பிராந்தியம்‘ என அழைக்கப்படுகிறது.




தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும்தென்மராட்சி, வடமராட்சி ஆகிய பிராந்தியங்கள் முன்னொரு காலத்தில் மறவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இடங்கள் என்பதோடு, அப்பிராந்தியங்களுக்கு தொன்மையான வரலாறு உண்டு என்பதை அம்மக்களிடையே நிலவும் ஐதீகங்கள், வாய்மொழிச் செய்திகள் ஆகியவை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அவற்றை நானும் முதன்மை ஆதாரங்களாக குறிப்பிட்டு கூறுவது பொருத்தமாகத் தெரியவில்லை. மாறாக இப்பிராந்தியத்திற்கு 2000 ஆண்டுகளுக்குக் குறையாத தொன்மையான தொடர்ச்சியான வரலாறு உண்டு என்பதற்கு, 1980 ஆம் ஆண்டின் பின்னர் இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த ஆதாரங்களை எடுத்துக் காட்டுவது பொருத்தமானது. 

அத்துடன் தென்மராட்சியின் தொன்மை தொடர்பாக நம்பத்தகுந்த வரலாற்று மூலங்களில் வரும் குறிப்புக்களை சுட்டிக்காட்டுவதும் அவசியம் ஆகும்.
யாழ்ப்பாண அரசு தொடர்பாக எழுந்த தமிழ் இலக்கியங்களில் கி.பி. 13ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டு வரை நல்லூரைத் தலைநகராகக் கொண்டு தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்த போது, யாழ்ப்பாணத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் ஒன்றாக தென்மராட்சி குறிப்பிடப்படுகிறது. ஆயினும் யாழ்ப்பாணம் (யாழ்பாணாயன் பட்டினம்) என்ற பெயர் முதன் முறையாக கி.பி. 15ஆம் நூற்றாண்டுக்கு உரிய திருப்புகழிலும், விஜயநகரப் பேரரசு காலக் கல்வெட்டிலும் குறிப்பிடப்படுவதற்கு முன்னர் தென்மராட்சிக்கு உட்பட்ட சில இடங்கள் வரலாற்றுச் சிறப்புடைய வட்டாரங்களாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இராஜாதிராஜ சோழன் தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது, அவனது படைகள் வட இலங்கை மீது படையெடுத்து மட்டிவால் என்னும் ஊரில் தங்கியிருந்த படைவீரர்களையும், யானைகளையும் சிறைப்பிடித்து தமிழகத்திற்கு கொண்டு சென்றதாக “திருவாலங்காடு‘ மற்றும் ‘பல்லவராயன் பேட்டை‘க் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவ்வாறு கல்வெட்டுக்களில் கூறப்படும் ‘மட்டிவால்‘ என்ற இடத்தைப் பேராசிரியர் பரணவிதானா மற்றும் பேராசிரியர் நீலகண்டசாஸ்திரி ஆகியோர் தென்மராட்சியில் உள்ள தற்போதைய மட்டுவில் கிராமம் என அடையாளப் படுத்தியுள்ளனர்.

14ஆம் நூற்றாண்டில் எழுந்த ‘நம்பொத்த‘ என்ற சிங்கள இலக்கியம் வட இலங்கையை ‘தமிழ் பட்டினம்‘ என அழைப்பதோடு, அப்பட்டினத்தின் எல்லையில் எல்லைக் கற்கள் நாட்டப்பட்டிருந்ததாகவும் கூறுகின்றது. அது கூறுகின்ற இடங்களில் தென்மராட்சியும் உள்ளடங்கி இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. 15ஆம் நூற்றாண்டில் எழுந்த “கோகிலசந்தேஸய‘ என்ற சிங்கள இலக்கியம் சாவகச்சேரிப் பிராந்தியத்தை “சாவக்கோட்டை‘ என தென்மராட்சியை யாழ்ப்பாண அரசுடன் தொடர்பு படுத்துகிறது. இதே பிராந்தியத்தை 15ஆம், 16ஆம் நூற்றாண்டில் எழுந்த ‘திரிஸிங்கள கடயிம் ஸஹ வித்தி’ என்னும் நூல் ‘சாவகிரி‘ எனவும் குறிப்பிடுகின்றது. பேராசிரியர் சி.பத்மநாதன் “யாழ்ப்பாண அரசு தோன்ற முன்னரே வட இலங்கையில் தமிழர் சார்பான அரசு ஒன்று ‘சாவகன்‘ தலைமையில் இருந்ததால் அவனது ஆதிக்கம் ஏற்பட்டதன் அடையாளமே தென்மராட்சியில் ‘சாவகச்சேரி‘, ‘சாவகன்கோட்டை‘ முதலான இடப் பெயர்கள் தோன்றக் காரணம்” எனக் குறிப்பிடுகிறார்.
தென்மராட்சியின் வரலாறு யாழ்ப்பாண அரசு காலத்தில் மேலும் முன்னிலை பெற்றதெனக் கூறலாம். வலிகாமம், வடமராட்சி ஆகிய பிராந்தியங்களை விட யாழ்ப்பாண அரசு கால நிர்வாகத்தில் தென்மராட்சியின் நிலப்பரப்பு மிகப் பெரியதாக இருந்தது. யாழ்ப்பாண அரசு காலப் பொருளாதாரத்திலும் உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகத்திலும் இப்பிராந்தியமே முதன்மை பெற்றிருந்ததாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. பெருநிலப்பரப்பு, கடல்சார் வாணிபம் என்பவற்றில் ‘கச்சாய்த் துறைமுகம்‘ முக்கிய இடத்தைப் பெற்றதுடன் யாழ்ப்பாண அரசுக்கு உதவியாக தென்னிந்தியாவில் இருந்து வந்த படைகள் இத்துறைமுகத்தையே பயன் படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
‘வையாபாடல்‘, ‘கைலாயமாலை‘ முதலான தமிழ் நூல்கள், யாழ்ப்பாண அரசு காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து வருவிக்கப்பட்ட தமிழ்க் குடிகளில் ஒரு பிரிவினர் தென்மராட்சிப் பிராந்தியத்திலுள்ள கச்சாய், முகமாலை, கோகிலாக்கண்டி முதலிய இடங்களில் குடியேற்றப்பட்டதாகவும் அவ்விடங்களை நிர்வகிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாகவும் கூறுகின்றன. கி.பி. 13ஆம் நூற்றாண்டின் பின்னர் இலங்கையில் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்த வரலாறு தொடர்ச்சியாகக் காணப்படுகிறது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டளவில் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் குடியேறிய இஸ்லாமிய மக்கள் படிப்படியாக தெற்கு நோக்கி நகர்ந்து கேரளாவில் உள்ள காயல் பட்டினத்தை தமது வணிக நகரமாக மாற்றியதுடன் தமிழர்களுடன் திருமண உறவுகளை ஏற்படுத்தியதால் அவர்கள் தமிழ் பேசும் மக்களாக மாறினர். 

காலப்போக்கில் அவர்கள் இலங்கையுடனும் வணிக, கலாசார உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். இந்நிலையில் யாழ்ப்பாணத்துடன் தொடர்பை ஏற்படுத்திய அவர்கள் முதலில் தென்மராட்சியில் உள்ள உசன், முகமாலை, கச்சாய், சாவகச்சேரி ஆகிய இடங்களில் குடியேற்றங்களை ஏற்படுத்தியதாக ‘யாழ்ப்பாண வைபமாலை‘ குறிப்பிடுகின்றது.
கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்த்துக்கேய ஆசிரியரான கெய்ரோஸ் பாதிரியார், போர்த்துக்கேயருக்கு எதிராக யாழ்ப்பாண மன்னர்கள் போரிட்ட காலங்களில் அப்படை வீரர்களின் காவல் மையமாகவும் யுத்த தளபாடங்களைப் பாதுகாக்கும் இடங்களாகவும் தென்மராட்சியில் உள்ள மட்டுவில், மந்துவில் முதலான கிராமங்கள் இருந்தன எனக் கூறுகிறார். பருத்தித்துறையில் இறங்கி யாழ்ப்பாணம் நோக்கி போர்த்துக்கேயப் படைகள் முன்னேறிய போது, அச்சுவேலிக்கும் புத்தூருக்கும் இடையில் யாழ்ப்பாண மன்னர்களுடன் நடைபெற்ற போரைத் தொடர்ந்து போத்துக்கேயப் படைகளின் ஒரு பிரிவினர் கிழக்கு நோக்கி தென்மராட்சிக்குச் சென்றதாக போர்த்துக்கேய ஆவணங்களில் குறிப்பிடப்படுகின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாண அரசு தொடர்பாகத் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் போர்த்துக்கேயப் படைகளிடம் தோல்வியடைந்த சங்கிலி மன்னன் கோப்பாயிற்கு தப்பிச் சென்று பின்னர் அங்கிருந்து தொண்டமானாறு கடல் நீரேரி ஊடாக மந்துவில் சென்றடைந்ததாகக் கூறுகிறது. இன்றும் மந்துவிலில் இடியுண்டு காணப்படும் புராதன கட்டடம் ‘சங்கிலியன் கோட்டை’ என்றே அழைக்கப்படுகிறது.
போத்துக்கேயர் ஆட்சியின் முடிவு காலமான 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

அதில் 128 கிராமங்களில் 120,000 மக்கள் வாழ்ந்து வந்ததாக போர்த்துக்கேய ஆவணங்கள் கூறுகின்றன. அத்துடன் தென்மராட்சியையும் அதைச் சூழவுள்ள பிராந்தியத்திலும் 52 கிராமங்கள் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கணக்கு யாழ்ப்பாணத்தின் அன்றைய மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதமான மக்கள் தென்மராட்சிப் பிராந்தியத்தில் வாழ்ந்ததைக் காட்டுகிறது. இவ்வாறு ஐரோப்பியர் ஆட்சி வரை தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும் வரலாற்று இலக்கியங்களில் கூறப்பட்டாலும் அதன் தொன்மையான வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் சமீபகாலத் தொல்லியல் கண்டு பிடிப்புக்களுக்கு முக்கிய இடமுண்டு.


தென்மராட்சியின் பூர்வீக மக்கள்
தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும்இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தொடக்கம் தென்மராட்சிப் பிராந்தியத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் எனக் கூறலாம். யாழ்ப்பாணக் குடாநாட்டின் பூர்வீக மக்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? எப்போது வந்தார்கள்? ஆகியவை தொடர்பான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் 1970களின் பின்னரே ஓரளவுக்கு மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய தொல்லியல் ஆய்விற்கு 1970களில் பென்சில்வேனியப் பல்கலைக்கழக அரும்பொருள் ஆய்வாளர் விமலாபேக்கிலே தலைமையில் கந்தரோடையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு களம் அமைத்து கொடுத்தது. இந்த ஆய்வின் மூலம் குடாநாட்டின் தொடக்ககாலப் பூர்வீக மக்கள் பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய திராவிடர் என்பதும், அவர்கள் தென்னிந்தியாவின் தென்பகுதியில் இருந்து குறிப்பாகத் தமிழகத்திலிருந்து இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறினர் என்பதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
1980களில் குடாநாட்டின் பூர்வீக குடியேற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் பொன்னம்பலம் இரகுபதி, தனது ஆய்வுகள் மூலம் குடாநாட்டில் இருந்த 40 இற்கும் மேற்பட்ட புராதன குடியிருப்பு மையங்களை வெளிக்கொணர்ந்தார். அக்குடியிருப்பு மையங்கள் சில தென்மராட்சியில் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

தற்போதைய வாரிவனேஸ்வரர் ஆலயத்திற்கு மேற்காக உள்ள மண்மேட்டில் அவர் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வின் மூலம், கந்தரோடையை ஒத்த புராதன குடியிருப்புக்கள் அங்கு இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
1990களின் பின்னர் தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள கண்ணாடிப்பிட்டி, மந்துவில், வரணி சோழன்மாசேரி, வேலம்பிராய் முதலிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் அவ்விடங்களில் புராதன காலத்தில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆதியில் இலங்கைக்குப் புலம்பெயர்ந்த மக்கள் இலகுவாக நீரைப் பெறக்கூடிய கடற்கரை சார்ந்த மணற்பாங்கான பிரதேசங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல் இலகுவாகக் குடியிருப்புக்களை அமைக்கக் கூடிய சிறிய பற்றைக்காடுகள் உள்ள இடங்கள் கடல் உணவைப் பெறக்கூடிய பரவைக் கடல் பிரதேசங்கள், கடல் போக்குவரத்திற்குச் சாதகமான துறைமுகங்கள் ஆகியவற்றைத் தமது குடியிருப்பை அமைக்கக்கூடிய இடங்களாகத் தெரிவு செய்தனர். தென்மராட்சியில் இச்சாதகமான சூழல்கள் பல இடங்களில் காணப்பட்டதால் அவ்விடங்களில் ஆதியில் மக்கள் குடியேற்றங்களை ஏற்படுத்தியிருப்பார்கள் எனக் கருத இடமுண்டு.


கி.மு. 3ஆம் நூற்றாண்டில் பௌத்தமதம் இலங்கையில் பரவ முன்னர் இங்கு வாழ்ந்த மக்களும் பண்பாடும் தென்னிந்தியாவின் தென்பகுதியில் இருந்து ஏற்பட்டன என்பதை அண்மைக் காலமாக மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் கண்டுபிடிப்புக்கள் உறுதிசெய்கின்றன. தென்மராட்சியின் அமைவிடம் இலங்கை  தமிழக உறவின் குறுக்கு நிலமாகவும் தமிழகப் பண்பாட்டை முதலில் உள்வாங்கும் தொடக்க நிலமாகவும் இருப்பதால் ஆதிகாலம் தொடக்கம் தமிழகப் பண்பாட்டின் செல்வாக்குக்கு உட்பட்ட பிராந்தியமாக இப்பிராந்தியம் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
புராதன காலத்தில் தென்மராட்சியின் அயல் நாட்டுத் தொடர்புகள்
1990 களில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பிரதி அதிபராக இருந்த அமரர் பாலச்சந்திரன் தென்மராட்சியில் தான் சேகரித்த பண்டைய நாணயங்கள் சிலவற்றை எனது ஆய்வுக்காகக் கொடுத்திருந்தார். தென்மராட்சியைப் பற்றிய  தொல்லியல் ஆய்வுக்கு அதுவே உந்து சக்தியாக அமைந்தது. தென்மராட்சி தொடர்பான தொல்லியல் ஆய்வில், பல்வேறு காலகட்டத்தை சேர்ந்த வட இந்திய, தென் இந்திய, தமிழக, உரோம நாணயங்கள் முதலியன கண்டுபிடிக்கப்பட்டன. ஆயினும் தென்மராட்சியின் தொன்மையையும் பெருமையையும் முக்கியத்துவத்தையும் அப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உரோமர் கால நாணயங்கள் பறைசாற்றுகின்றன.
கி.பி. 1ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க நாட்டவரான தொலமி தனது நூலில் தென்மராட்சிக்கு உட்பட்ட வட இலங்கையை “நாகடிப‘ (நாகதீவு) எனக் கூறுகிறார். அதேகாலப் பகுதியைச் சேர்ந்த “பெரிப்புலஸ்‘ என்ற நூல் வட இலங்கைக்கும் மேற்காசிய நாடுகளுக்கும் இடையிலான வணிக உறவு பற்றிக் கூறுகிறது. 
 
Tamil Charam Group (தமிழ்ச்சரம் தகவல்கள்)
Public group · 219 members
Join Group
 

Friday 31 July 2020

உங்களுக்குத் தெரியுமா ?

உங்களுக்குத் தெரியுமா? 

இலங்கையில் தமிழ்மொழி கல்வி, மொழியாக இல்லாமல் விட்டிருந்தால் இன்று தாய்மொழி தெரியாத ஒர் இனமாக இலங்கைத் தமிழ் மக்கள் இருந்திருப்பார்கள். கல்வி மொழியாகத் தமிழ் இருப்பதற்கும், உலகெங்கும் பலநாடுகளில் இன்று தமிழ்மொழி வியாபித்திருப்பதற்கும் காரணமானவர் யார் தெரியுமா?

அவர்தான் மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பில் இலங்கைச் சட்டசபை உறுப்பினராகவும், பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய அமரர்.வ.நல்லையாஅவர்கள்.

1943 ஜூன் 22 ஆம் திகதி சட்டசபையில், ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள் ஒரு பிரேரணையைச் சமர்ப்பித்தார். அதில்,
1. எல்லாப்பாடசாலைகளிலும் சிங்களம் கல்வி புகட்டும் மொழியாக ஆக்கப்படவேண்டும் என்பதும்

2. பொதுப் பரீட்சைகள் எல்லாவற்றிலும் சிங்களம் கட்டாய பாடமாக ஆக்கப்படவேண்டும் என்பதும்

3. சபையின் அலுவல்களைச் சிங்களத்தில் ஆற்றுவதற்கான சட்டங்கள் ஆக்கப்படவேண்டும் என்பதும் முக்கிய விடயங்களாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்தப் பிரேரணை 1944 ஆம் ஆண்டு மே மாதம் சபையில் விவாதத்திற்கு வந்தபோது, அந்தப் பிரேரணையின் இருந்த சிங்களம் என்பதற்குப் பதிலாக, "சிங்களமும் தமிழும்" என்ற திருத்தத்தினை வி.நல்லையா அவர்கள் சமர்ப்பித்து முன்மொழிந்தார். 




இந்தத் திருத்தத்திற்கு 29 வாக்குக்களும், எதிராக எட்டு வாக்குக்களும் அளிக்கப்பட்டன. திருத்தம் நிறைவேறியது. தமிழ் கல்வி மொழியாக இல்லாமல் போகவிருந்த மாபெரும் அபாயம் நீங்கியது. அன்று திரு. வீ.நல்லையா அவர்கள் அந்தத் திருத்தத்தினைச் சமர்ப்பிக்காமல் இருந்திருந்தால் இன்று நாமெல்லாம், தமிழ்மொழியை எழுத வாசிக்கத் தெரியாத தமிழர்களாக இருந்திருப்போம். தமிழைப் பேசிக்கொண்டிருந்திருப்போமா என்பதே சந்தேகம்தான்!
 
Tamil Charam Group (தமிழ்ச்சரம் தகவல்கள்)
Public group · 219 members
Join Group
 

Friday 24 July 2020

இசைஞானி இளையராஜா பற்றிய சில சுவாரசிய தகவல்கள்


1. இயற்பெயர் : டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன்.

2. பிறந்த தேதி : 2.6.1943

3. தந்தை : டேனியல் ராமசாமி

4. தாய் : சின்னத்தாய்

5. சொந்த ஊர் : பண்ணைபுரம், தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

6. கல்வி : எட்டாம் வகுப்பு

7. மனைவி : ஜீவா ( சொந்த சகோதரியின் மகள் )

8. குழந்தைகள் : கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, பவதாரணி

9. சகோதரர்கள் : பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் (கங்கை அமரன்)

10. இளையராஜாவின் தந்தை தேயிலை தோட்டத்தில் கங்காணியராக பணியாற்றியவர். அவருக்கு 25 ஏக்கர் பரப்பு உள்ள எஸ்டேட் சொந்தமாக இருந்தது

11. 1958-ல் திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாவலர் வரதராஜனின் உடல்நிலை சரியில்லாததால் அம்மா சின்னத்தாய், இளையராஜாவை வேண்டுமானால் அழைத்துக் கொண்டு போ, இடையிடையே  ஒரு பாடலை அவன் பாடினால் உனக்குக் கொஞ்சம் ஓய்வாக இருக்குமே என்று கூறியிருக்கிறார்.

என் அன்னையின் திருவாக்கில்தான் என் கலை வாழ்க்கை ஆரம்பமானது. அன்று பொன் மலையிலும், திருவெரும்பூரிலும் நடந்த அந்த இசை நிகழ்ச்சிகளில் என் பாட்டுக்கு அவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததாக இளையராஜா அடிக்கடி நினைவு கூறுவார்.

12. ஹார்மோனியத்தை தலையில் சுமந்தபடி பாவலர் வரதராஜன் போன பாதையில் தென்னிந்தியாவின் பல்வேறு கிராமங்களுக்கு கால்நடையாகவும், மாட்டு வண்டிகளிலும், பயணம் செய்து வாசித்துப்பாடி மிக இளம் வயதிலேயே லட்சோப லட்சம் மக்களை சந்தித்து இசையின் நாடித்துடிப்பை அறிந்தவர்.

13. கம்யூனிஸ்ட் கட்சிப் பிராச்சார பாடகராக அண்ணன் பாவலர் வரதராஜனுடன் இளையராஜா தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்.

இன்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இவர்களது பாடல்கள் கம்யூனிஸ்ட் கட்சி வளர்வதற்கு உதவியாய் இருந்ததை அன்போடு சொல்லிக் கொண்டிருக்கிரார்கள்.

14. ஆரம்ப காலங்களில் இளையராஜா பெண்குரலில் மட்டுமே பாடி வந்திருக்கிறார்.

15. வானுயுர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகின்றேன் நா வறண்டு பாடுகின்றேன் என்று சொத்து பத்துக்களை நாடகம் போட்டு இழந்திருந்தாலும் லட்சியத்தை இழக்காத அண்ணனின் பாதையில் நடந்தது ஒரு பாடமாக மட்டுமில்லாமல் ஒரு தவமாக பரிணமித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார் இளையராஜா.

16. பாட்டு கேட்பதற்காக வாங்கியிருந்த ரேடியோவை விற்றுவிட்டு இளையராஜா தன் சகோதரர்கள் ஆர்.டி.பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோரோடு இசையமைப்பாளராக வேண்டும் என்று சென்னைக்கு ரயில் ஏறினார்.

17. மேற்கத்திய இசைக்கு இளையராஜாவின் குருநாதர் மாஸ்டர் தன்ராஜ்

18. வருமானம் குறைவாக இருந்த இளையராஜாவிடம் பணமே வாங்காமல் இசையின் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுத் தந்தார் தன்ராஜ் மாஸ்டர்.







19. பியானோ கற்று கொள்வதற்காக சென்ற இளையராஜாவின் ஆர்வத்தைப் பார்த்து அதைக் கற்றுக்கொள், இதைக் கற்றுக்கொள் என்று கொஞ்சம் கொஞ்மாக எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தார் தன்ராஜ் மாஸ்டர்.

20. வாரத்தின் இரண்டுநாள் இரண்டு மணிநேரம் பயிற்சி பெற்று வந்த இளையராஜா தினமும் அங்கேயே பயிற்சி பெறலானார்.

21. ஹார்மோனியம், கிட்டார், பியானோ, கீபோர்ட், புல்லாங்குழல் என்று பல்வேறு இசைக்கருவிகளை வாசிப்பதில் தேர்ந்தவர்.

22. க்ளாசிக்கல் கிட்டார் இசையில் லண்டன் ட்ரினிட்டி இசைக்கல்லூரியின் பாடத்திட்டத்தில் 8வது கிரேட் வரை முடித்து அதில் தங்கப்பதக்கம் பெற்றவர்.

23. திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன் மேடை நாடகங்களுக்கு இசையமைத்து வந்தார். அதாவது 1961 ஆம் ஆண்டில் தனது சகோதரர்களுடன் நாடகக்குழுவில் சேர்ந்து, இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு சென்று சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து கொண்டார்.

24. சகோதரர்கள் மூவரும் இணைந்து ”பாவலர் பிரதர்ஸ்” என்ற இசைக்குழுவும் நடத்தி வந்துள்ளார்கள்.

25. இசையமைப்பதற்கு இசையை முறையாக கற்க வேண்டும் என்பதால் தங்களிடம் இருந்த ஆம்ப்ளிஃபயரை அடகு வைத்து வெஸ்டர்ன் க்ளாசிக்கல் இசை பயின்றார் இளையராஜா. ஆனால் அந்த ஆம்ப்ளிஃபயரை திரும்ப மீட்டெடுக்க சென்றபொழுது அந்த இடத்தில் வேறொரு கடை இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டார்.

26. ஆரம்ப காலங்களில் தான் பணியாற்றும் இசையமைப்பாளர் தயாரிப்பாளருடனும், இயக்குனருடனும் உட்கார்ந்து மெட்டு அமைக்கும் போது மெட்டுக்களை நோட்ஸ் எடுக்கும் கம்போசிங் அசிஸ்டென்ட்டாக இளையராஜா பணியாற்றினார்.

27. 1970 களில் பகுதிநேர வாத்தியக்கலைஞராக இசையமைப்பாளர் ”சலீல் சௌத்ரி”யிடம் பணியில் சேர்ந்தார்.

28. சலீல் சௌத்ரிக்கு பின்னர், கன்னட இசையமைப்பாளரான ஜி. கே. வெங்கடேஷ் அவர்களின் உதவியாளராக சேர்ந்த அவர், அவரது இசைக்குழுவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்தார்.

29.. முதல் படம் “அன்னக்கிளி” தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் பஞ்சு அருணாச்சலத்தால் 1976 ல் அறிமுகம் செய்யப்பட்டார்.

30. அன்னக்கிளி படத்திற்காக அவர் தேர்வானபொழுது சற்றே புருவம் உயர்த்திய  அனைவருக்கும் பதிலடி தர இயக்குனர் பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி படப்பாடல்களை இசையமைத்துக் காட்டு
எனக்கூற, அங்கிருந்த திருமண மண்டபத்திலேயே அத்தனை பாடல்களுக்கும் இசையமைத்துத் தனது திறமையை நிரூபித்தார் இளையராஜா.







31. இசைக்கருவி இல்லாமல் தாளம் போட்டு வாய்ப்பு பெற்ற ராசையாவினை என்ன பெயரில் அறிமுகம் செய்யலாம் எனக்கேட்க ”பாவலர் பிரதர்ஸ்” என்றார் இசைஞானி.. இது சற்று பழையதாய்
உள்ளது என்று யோசித்த இயக்குனர் பஞ்சு அருணாச்சலம் வைத்த பெயரே ”இளையராஜா”.

32. சினிமாவிற்கு பின் ராசையா இளையராஜா ஆனது அனைவரும் அறிந்தது. ஆனால் சினிமாவில் சேருவதற்கு முன் டேனியல் ராசைய்யா என்றே அழைக்கப்பட்டார்.

33. கதை கவிதை கட்டுரை எழுதுவதும் , பென்சில் ட்ராயிங் வரைவதும், தான் எடுத்த புகைப்படங்களை ப்ரேம் செய்து தன் வீட்டில் மாட்டுவதும் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு.

34. சிபாரிசு சுத்தமாக பிடிக்காது. ஆனால் ஒரே முறை சிபாரிசு கருதி நடிகர் சங்கிலிமுருகனுக்கு கால்ஷீட் தந்தார். சிபாரிசு செய்தவர் இளையராஜாவின் தாயார் சின்னத்தாய் அம்மாள்.

35. அன்னையின் மீது அவர் பாசம் அதிகம். சின்னத்தாய் அம்மாள் சென்னை வந்தால் ராசய்யாவின் வீட்டிலே தான் தங்குவார். காரணம் கேட்டதற்கு "ராஜா இன்னும் குழந்தையாவே இருக்கான். அவன் காலையிலேயே வேலைக்குப் போகும்போது நான் போய் டாட்டா காட்டணும். சாயங்காலம் அவன் வரும்போது நான் இங்க இருக்கனும்" என நெகிழ்ச்சியாய் சொன்னார்.

36. எத்தனை பட்டங்கள் பெற்றாலும் எத்தனை விருதுகள் பெற்றாலும் மேஸ்ட்ரோ, இசைஞானி என்று புனைப்பெயரிட்டு அழைத்தாலும் பண்ணைபுரத்துக்காரர் என்பதே எனக்கு பெருமை என்பார். 

37. கொஞ்சம் பரபரப்பு குறைந்திருந்த தாய் வழிப்பாட்டு பாடல்கள் இளையராஜா காலத்தில் தான் புத்துயிர் பெற்றன.

38. கவிஞர் கண்ணதாசனால் திரையுலகத்தில் இசையமைக்கத் தொடங்கிய இளையராஜா தான் கண்ணதாசன் அவர்களின் கடைசி பாடலுக்கும் இசையமைத்தார். 

39. பண்ணைபுரத்தில் ஒரு இடம் வாங்கி அதில் அவர் சின்னத்தாய் அம்மாளின் இறப்பிற்கு பிறகு அங்கு ஒரு கோவில் எழுப்பினார். அங்கு அமர்ந்து தியானம் செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமான
ஒன்று.

40. பின்னணி இசை சேர்ப்பின்போது இளையராஜா காட்சியை ஒருமுறை பார்த்ததுமே, தாளில் இசைக் குறிப்புகளை எழுதிக் கொடுத்து உடனடியாகவே ஒலிப்பதிவுக்குச் சென்றுவிடுவார் என்பதை
ஒரு ஐதீகக்கதைப்போல சொல்லிக் கொள்கிறார்கள்.

வாத்தியத்தில் வாசித்துப்பார்ப்பதோ இசைவரிசையை காதால்கேட்டு சரிசெய்வதோ இல்லை. இசைக்குழு அந்த இசைக்குறிப்புகளை வாசிக்கும்போது அவை மிகக் கச்சிதமாக இணைந்து ஒரே இசையோட்டமாக சிறப்பாக வெளிப்படும்.




ஒத்திசைவிலும் காலக்கணக்கிலும் அவை கச்சிதமாக இருக்கும். பின்னணி இசை எங்கே தொடங்க வேண்டுமோ அங்கே தொடங்கி அக்காட்சிக்கு இசை எங்கே முடியவேண்டுமோ அங்கே கச்சிதமாக முடிந்துவிடும்.

சரிபார்த்துக் கொள்வதற்காக ஒருமுறைகூட அவர் வாத்தியங்களை தொட்டுப்பார்க்க வேண்டியதில்லை. அனைத்துமே அவரது மனதில் மிகச்சரியாக உருக்கொண்டிருக்கும்.

41.காட்சியை ஒருமுறை பார்க்கும் போதே மனதிற்குள் இசைவடிவத்தை யோசித்து, அடுத்த விநாடியே கைகளால் இசைக்குறிப்பை வாசித்துப் பார்க்காமல் எழுதி முடித்து, மற்றவர்களை வாசிக்கச் செய்வார்.

*மிகத்துல்லியமாக வரும் அந்த இசை பார்ப்போரை வியக்க வைப்பதோடு கற்பனாசக்தியின் உச்சம் என்று பிரமித்து அவரது நண்பர் இயக்குநர் பாரதிராஜா அடிக்கடி சொல்வார்.

42. பஞ்சமுகி என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை இளையராஜா உருவாக்கினார்.

43. ஆதி சங்கரர் எழுதிய “மீனாக்ஷி ஸ்தோத்திரம்” என்ற பக்திப்பாடலுக்கு இசையமைத்தார்.

44. 2010 ல் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷண்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

45. 2012 ல்‘சங்கீத நாடக அகாடமி விருது’ வென்றார்

46. இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறை பெற்றுள்ளார்.

1985  - சாகர சங்கமம் (தெலுங்கு)
1987  - சிந்து பைரவி (தமிழ்)
1989  - ருத்ர வீணை (தெலுங்கு)
2009  - பழஸிராஜா (மலையாளம்)
2016 - தாரை தப்பட்டை (பின்னணி இசை) (தமிழ்)

47. லண்டன் ராயல் ஃபில் ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவினைக் கொண்டு, அவர் ‘சிம்பொனி’ ஒன்றை இசையமைத்தார். அந்த ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்களை “மேஸ்ட்ரோ” என்று அழைப்பர். அந்த சாதனையை முதலில் நிகழ்த்தியுள்ள ஆசியக் கலைஞர் இவரே.

48. மகாத்மா காந்திஜி எழுதிய கவிதையை  ‘ஆதித்ய பிர்லா’ நிறுவனத்தினர்  ‘இளையராஜா இசையில்’ பாடலாக்க திட்டமிட்டனர்.

பண்டிட் பீம்ஸென் ஜோஷி, பண்டிட் அஜய் சக்ரவர்த்தி, பேகம் பர்வீன் சுல்தானா ஆகிய மேதைகளைப் பாட வைத்து அப்பாடலை உருவாக்கினார். இந்திய இசை மேதை  ‘நவ்ஷத்’ அப்பாடலை மிகவும் பாராட்டிப் பேசினார்.

49. கோவையில்தான் எனது ஹார்மோனியத்தை 85 ரூபாய்க்கு இங்குள்ள சுப்பையா ஆசாரியாரிடம் வாங்கினேன்.அந்த ஹார்மோனியம்தான் இன்றும் என்னிடம் உள்ளது என்று அடிக்கடி சொல்வார்.

50. கமல்ஹாசன் குரலில் இருக்கும்  ‘பிட்ச்’ அபூர்வமானது.ஒரே நாளில் இரண்டு பாடல் கம்போஸ் செய்து அவரை பாட வைத்துள்ளார் ஒன்று... ‘சிகப்பு ரோஜாக்களில்’ வரும் ‘நினைவோ ஒரு
பறவை’மற்றொன்று...அவள் அப்படித்தான் படத்தில் வரும் ‘பன்னீர் புஷ்பங்களே...ராகம் பாடுங்கள்’ என்ற பாடல்.

51. நான் இசையமைப்பாளராக இருந்து எனக்கு போட்டியாளராக இளையராஜா இருந்திருந்தால்பொறாமையால் என்ன செய்திருப்பேன் என்று எனக்கே தெரியாது என கமல்ஹாசன் குமுதம் புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார்.

அப்படி ஒரு திறமை படைத்தவர் இளையராஜா அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் திறமையின் உயரம் கண்டு பிரமிக்கிறேன் என்று பெருமை கொள்வார்.

52."How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா.

இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்த இந்த இசைத் தொகுப்பினை இசை
மும்மூர்த்திகளில் ஒருவரான ” தியாகராஜ சுவாமிகள்” மற்றும் மேற்கத்திய இசைமேதை ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.

53. "Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.

54. "ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.

55. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசையுடன் கூடிய சிம்பொனி வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.

56. 1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினாலும் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டவர் இளையராஜா.

57. இளையராஜா புகைப்படக்கலையில் மிகத்திறமை படைத்தவர்,

58. பாரதிராஜா போன்ற நெருங்கிய இயக்குனர்களுக்கு புதிய ட்யூன்களைக்கொடுத்து இதற்கு காட்சியமைப்பை உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி பல பாடல்களை ஹிட்டாகக்
கொடுத்திருக்கிறார்.

59.  பாடலாசிரியர் வைரமுத்து இளையராஜாவைப் பற்றி பேசும் போது இசையின் காட்டாற்று வெள்ளம் என்று வர்ணிப்பார்.

60.அரசியல் தலைவர்கள் முதல் அன்றாடக் கூலிதொழிலாளி வரை சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் அவரின் ரசிகர்கள் பரந்து விரிந்து கிடக்கிறார்கள்.

61. இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்த போது, அதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் கூட தமிழகத்தில் ஹிந்தி பாடல்களின் ஆதிக்கம் மறையவில்லை.

ஹிந்தி பாடல்களை கேட்பதையும்
பாடுவதையும் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் அந்த அலையை ஓய வைத்து தமிழ் பாடல்களை தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தவரும் விரும்பிக் கேட்கும்படியான சாதனையை செய்தவர் இளையராஜா.

62. முதல் படம் இசையமைக்கும் போது இளையராஜாவின் வயது 33.

63. பெல்பாட்டம், விதவிதமான கலர் சட்டைகள், கருப்பு கண்னாடிகள் என்றெல்லாம் இருந்த இளையராஜா திரையுலகமே தன் பக்கம் திரும்பிய போது எளிமையான தோற்றத்திற்கு மாறிவிட்டார்.

64. இளையராஜாவின் இசைக்குறிப்புகள் இன்னும் சில ஆண்டுகளில் இசைக்கல்லூரிகளின் பாடப் புத்தகங்களில் இடம்பெறும் என்று பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் கூறியுள்ளார்.

65. ஒரே ஆண்டில் இளையராஜா 56 படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசை உட்பட இசையமைத்து சாதனை படைதுள்ளார்.

66. ஆழ்ந்த ஞானம், நேரம் தவறாமை, இசைமேல் கொண்ட பற்று, கடின உழைப்பு, கவனம் சிதறாமை என்று பல்வேறு உயர் எண்ணங்களால் பல கோடி இதயங்களைக் கவர்ந்துள்ளார்.

67. திரையிசையில் இதுவரை தன்னுடைய இசையமைப்பு மற்றும் பிற இசையமைப்பளர்களின் இசையிலும் சேர்த்து 450 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

68. திரைப்படம் தவிர பல்வேறு ஆல்பங்களில் 100 பாடல்களுக்கு மேல் இசையமைத்துப் பாடியுள்ளார்.

69. இசைஞானி என்ற பட்டம் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது.

70. உலகின் தலைசிறந்த 25 இசையமைப்பளர்களை வரிசைப்படுத்திய மிகப் புகழ்பெற்ற அமெரிக்க இணையதளம் இளையராஜாவுக்கு 9 வது இடம் அளித்துள்ளது.

அதே இணையதளம் இளையராஜாவை முதல் இடத்திற்கும் அவரே என்று அறிவிக்கும் நாள் வெகு சமீபத்திலிருக்கிறது.

71. சில வருடங்களுக்கு முன் லண்டன் பிபிசி வானொலி நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த 75 ஆண்டுகளில் மிகச்சிறந்த பாடலாக இளையராஜா இசையமைத்த ’தளபதி’ திரைப்படத்தின் “ராக்கம்மா கையத்தட்டு”ப் பாடலை மிக சிறந்த பாடலாக அறிவித்துள்ளது.

72. இளையராஜா எழுதிய புத்தகங்கள் :

1. சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்)
2. வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு)
3. வழித்துணை
4. துளி கடல்
5. ஞான கங்கா
6. பால் நிலாப்பாதை
7. உண்மைக்குத் திரை ஏது?
8.யாருக்கு யார் எழுதுவது?
9. என் நரம்பு வீணை
10. நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை,
இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)
11. பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்
12. இளையராஜாவின் சிந்தனைகள்.







73. 1000 படங்களைத்தாண்டி தன் இசைப்பயணத்தை தொடரும் பெருமைக்குரிய இந்திய இசையமைப்பாளராக உலகை வலம் வரும் இமாலய மனிதர் ”இசைஞானி இளையராஜா.

Wednesday 15 July 2020

இன்று ஆடிப்பிறப்பு //



 ☀️ஆடிப்பிறப்பு என்பது தமிழ் மாதமான "ஆடி" இன் முதல் நாள், பொதுவாக ஜூலை 15-17 வரை வருகிறது. 2018 இல் அது ஜூலை 17 அன்று.

திருவிழாவிற்கு பல பண்புக்கூறுகள் உள்ளன, மேலும் இது பருவகால இனிப்பு சுவைகளின் மைய கொண்டாட்டத்தை கொண்டாடுகிறது.

இந்த திருவிழா தமிழர்களின், குறிப்பாக வட இலங்கையின் குறிப்பிடத்தக்க கலாச்சார விருந்துகளில் ஒன்றாகும்.

"கொழுக்கட்டை" என்று அழைக்கப்படும் வேகவைத்த அல்லது சில நேரங்களில் வறுத்த பாலாடைகளில் நிரப்பப்பட்ட  தேங்காய் துண்டுகள் இட்டு ஆடிக்கூழ் சமைக்கப்படும்  .

திருவிழா பற்றிய பல புராணங்களில் ஒன்று, ஜனவரி 6/15 அன்று "பொங்கல்" உடன் முதல் 6 மாதங்களும் தொடங்கியதைப் போலவே, இனிமையாகக் கொண்டாடப்படும் 12 மாதங்களின் இரண்டாம் பாதியின் விடியல்.





"ஆடி" இன் ஆரம்பம் தென்றல் காற்று மற்றும் பருவகால மழைக்கு வழிவகுக்கிறது. இயற்கையின் கூடுதல் முக்கியத்துவத்தில், "ஆடி" ஆரம்பம் சூரிய பாதையை மாற்றுவதையும் குறிக்கிறது.

"ஆடி" உற்சாகம் "ஆடி கூஷ்" க்கு புகழ்பெற்றது, பழுப்பு அரிசி மாவுடன் ஒரு கஞ்சி முக்கிய மூலப்பொருளாக உள்ளது, இது பொதுவாக இனிப்பு மற்றும் நறுமணமானது. தமிழ் நாட்காட்டியில் வரவிருக்கும் ஆண்டின் மீதமுள்ள மற்றும் அடுத்த விருந்துகளின் தொகுப்பைக் கடந்து செல்ல அதன் தனித்துவமான சுவையுடன் ஒரு பெரிய கூட்டத்திற்கு சேவை செய்ய இது பெரும்பாலும் தயாராக உள்ளது!

☀️ஆடிப்பிறப்பு" தினத்தன்று ஓதப்படுவது போல் எழுதப்பட்ட கவிதை தொடங்குகிறது,
"நாளை விடுமுறை ஆடிப்பிறப்பு மகிழ்ச்சியான மகிழ்ச்சி நண்பர்கள் "


நவலியூர் சோமாசுந்தர புலவர் (மே 25, 1876-ஜூலை 10, 1953) எழுதியது - தமிழில் முழு கவிதை:

 ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் , ஆனந்தம் ,தோழர்களே
கூடிப் பனங்கட்டி; கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே

குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

இந்த வீடியோவை பார்த்து நீங்களும் ஆடிக்கூழ் சமையுங்கள் 



பண்டைய யாழ்ப்பாண சேது நாணயங்கள் சில


கி.பி 1215ம் ஆண்டில் சிங்கை நகரை மையமாகக் கொண்டு தோற்றம் பெற்ற யாழ்ப்பாண ராசதானியானது கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு மேல் நிலைத்திருந்த ஒரு பலமான ராஜ்ஜமாக விளங்கியது.
யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகள் இலங்கையின் பல துறைமுகங்களை மற்றும் கறுவா ஏகபோக உரிமையையும் தம்மகத்தே வைத்திருந்தனர்.




சேது நாணயங்கள் எனப்படுபவை யாதெனில், இந்த ஆரியச் சக்கரவர்திகளால் பயன்படுத்தப்பட்ட நாணயங்களே ஆகும்.இந்த நாணயங்களில் நந்தி மற்றும் சேது எனும் விடயங்கள் அடங்கியுள்ளன.
சில நாணயங்களில் நந்தியுடன் மயில் மற்றும் மங்கையின் உருவங்கள் காணப்படுகின்றன.







































































 
Tamil Charam Group (தமிழ்ச்சரம் தகவல்கள்)
Public group · 219 members
Join Group
 

Sunday 12 July 2020

இன்றைய காலங்களில் வயதானவர்களை கேலி செய்யும் மனப்பான்மை அதிகரித்து வருகின்றாகின்றதா ?


இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினரால் இதற்க்கு முன் எப்போதும் இல்லாத வகையில் வயதானவர்களை தேவையில்லாத பெரும் சுமை என என்னும் மனநிலை எல்லா நாடுகளிலும் அதிகரித்து வருகின்றது.

பல குடும்பங்களில் வயதானவர்கள் பல தர்மசங்கடமான சூழ்நிலைகளுக்குள் உள்ளாகின்றனர் .இனிமேல் அவர்கள் எமக்கு உதவமாட்டார்கள் .அவர்களிடம் எதுவித உடல் சக்தியும் இல்லை .இவர்களால் எமக்குத்தான் வீண்செலவு அல்லது நம்மால் சுயமாக சொந்த காலில் நிற்கமுடியும் என்ற மனநிலையும் இளம்பருவத்தினரிடம் உருவாகின்றது .

ஆனால் அந்த வயதான முதியவர்கள் தமது பிள்ளைகளை ஒருபோதும்  ஒரு சுமையாக கருதியதில்லை.அவர்கள் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி தமது பிள்ளைகளை இந்தளவு படிக்கவைத்து பெரிய நிலைக்கு உயர்த்தியுள்ளனர்.தாம் உண்ட உணவை விட பிள்ளைகளுக்கே அதிக செலவு செய்து அவர்களது விருப்பங்களை நிவர்த்தி செய்துள்ளனர் .

பிள்ளைகள் பெற்றோருக்கு தாம் இந்த செய்நன்றி கடனை தீர்க்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அடிக்கடி வீட்டினுள் அவர்களை பேசுவதாலேயே மனம் காயப்படும் வகையில் பேசுகின்றனர்.ஒருசிலர் பெற்றோரை தமக்கு சுமை என எண்ணி முதியோர் காப்பகத்தில் சேர்த்து விடுகின்றனர்.

'உழைக்கும் சமயத்தில் தமக்காகவும் ,பிள்ளைகளுக்காகவும் தமது விருப்பங்களை துறந்து ஓடி ஓடி உழைத்த பெற்றோர் தமது இறுதிகாலங்களில் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றுவது தவறா ?"
இதனை இளம்தலைமுறையினர் கட்டாயம் புரிந்துகொள்ளவேண்டும் .

"இந்த கிழவனுக்கு இந்த வயசில ஆசையைப்பார்","இந்த வயசுலயும் பீசா ,பர்கர் கேக்குது இந்தாளுக்கு "என்று அவர்களை திட்டுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.ஒரு சில இடங்களில் இந்த கிண்டல் கேலிகளால் முதியவர்கள்  தற்கொலை செய்த சம்பவங்களும் உண்டு .

நீங்கள் செய்வதை பார்த்து உங்கள் குழந்தைகள் செய்வார்கள் .அது மட்டுமில்லாமல் இறுதிகாலங்களில் அவர்களில் மனதை நோகடிக்காமல் இருங்கள் .பெரியோரின் அனுபவங்களை பெறுங்கள் மற்றும் அவர்களின் ஆசீர்வாதங்களை பெறுங்கள் .

ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் எப்போதும் இளமையாகவே இருக்கப்போவதில்லை .நீங்கள் முதுமை நிலையை அடையும் போது அதன் கஷ்டங்களை அனுபவிப்பீர்கள் ,ஆகவே வயதானவர்களை கேலி,கிண்டல் செய்வதை தவிருங்கள்
ஒன்று மட்டும் நாம் புரிந்து கொள்ளவேண்டும் முதுமையை அடைந்தவுடன் அவர்களின் வாழ்க்கை ஒன்றும் இருளடையப்போவதில்லை,அவர்களுக்கும் பொழுது விடிந்துகொண்டுதான் இருக்கும் .




Thursday 9 July 2020

மறுபக்கம் || காலனித்துவதாலும் முதலாளித்துவதாலும் மாண்ட மனிதம்

வின்ஸ்டன் சர்ச்சில் 20 ஆம் நூற்றாண்டின் மிகைப்படுத்தப்பட்ட அரசியல் தலைவர்களில் ஒருவர். இந்தியர்களுக்கு எதிரான அவரது வெறுப்பு 20 ஆம் நூற்றாண்டின் மிக மோசமான பஞ்சத்தை ஏற்படுத்தியது, கிட்டத்தட்ட 4 மில்லியன் இந்தியர்கள் இறந்தனர். ‘மனிதனால் உருவாக்கப்பட்ட’ பஞ்சத்தை ஏற்படுத்துவதில் அவர் நேரடியாக ஈடுபட்டார் என்பதற்கு புதிய சான்றுகள் வெளிவருகின்றன. 



வங்காளப் பஞ்சம் 


பின்வரும் அறிக்கைகள் அவரது இனவெறி மனநிலையைப் பற்றி அதிகம் கூறுகின்றன. வெள்ளை இனத்தை மற்றவர்களை விட 
உயர்ந்ததாகக் கருதி, மற்றவர்களை ஆளுவதற்கு உரிமை உண்டு என்றார். 



வின்சன் சர்ச்சில் 


"உதாரணமாக, அமெரிக்காவின் செவ்விந்தியர்களுக்கோ அல்லது ஆஸ்திரேலியாவின் கறுப்பின மக்களுக்கோ ஒரு பெரிய தவறு செய்யப்பட்டுள்ளது என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு வலுவான இனம், ஒரு உயர் தர இனம், அதை விட உலக புத்திசாலித்தனமான இனம், வந்து அவற்றின் இடத்தைப் பிடித்தது. " 1937 இல், அவர் பாலஸ்தீன ராயல் கமிஷனிடம் கூறினார் "நாகரிகமற்ற பழங்குடியினருக்கு எதிராக விஷ வாயுவைப் பயன்படுத்துவதற்கு நான் கடுமையாக ஆதரவாக இருக்கிறேன்". குர்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் அதை பரிந்துரைத்தார். 



பட்டினியால் வாடும் இந்தியர் 


இந்தியர்கள் மீது: “நான் இந்தியர்களை வெறுக்கிறேன். மிருகத்தனமான மதத்துடன் கூடிய மிருகத்தனமான மக்களாக. " 1943 அன்று வங்காளப் பஞ்சம்: "நிவாரணம் எதுவும் செய்யாது, ஏனெனில் இந்தியர்கள் முயல்களைப் போல இனப்பெருக்கம் செய்கிறார்கள்." அவர் பெரும் வங்காள பஞ்சத்திற்கு இந்தியர்களை (ஐக்கிய இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்) குற்றம் சாட்டினார். உண்மையில் அவர் WWII க்காக இந்தியாவில் இருந்து உணவுப் பொருட்களை ஐரோப்பாவில் சேமித்து வைக்கிறார். 





மனசாட்சியால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் லண்டனில் பிரதமருக்கு கடிதம் எழுதியபோது, ​​அவருடைய கொள்கைகள் தேவையற்ற உயிர் இழப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டியபோது, ​​அவர் செய்யவேண்டியதெல்லாம், ‘காந்தி ஏன் இன்னும் இறக்கவில்லை?’ என்ற அறிக்கையின் விளிம்பில் அவர் எழுதக்கூடியது. காந்தி மீது: அவர் அடிக்கடி காந்தியை "வீரியம் மிக்க வெறி பிடித்தவர்" என்று அழைத்தார். "ஒரு தேசத்துரோக மத்திய கோயில் வழக்கறிஞரான திரு காந்தியைப் பார்ப்பது ஒரு ஆபத்தானது மற்றும் குமட்டல் தருகிறது, இப்போது ஒரு ஃபக்கீர் என்று காட்டிக்கொள்கிறார்.அரண்மனையின் படிகளை அரை நிர்வாணமாகக் காட்டுகிறார்," "காந்தி நோன்பு நோற்பின் காரணமாக விடுவிக்கப்படக்கூடாது" என்று சர்ச்சில் மற்றொரு சந்தர்ப்பத்தில் அமைச்சரவையில் கூறினார்.


Friday 3 July 2020

சைவத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்திய ஈழத்து சித்தரான யோகர் சுவாமிகள்

ஈழத்துச் சித்தர் பரம்பரையின் மூலகுருவானவர் கடையிற்சுவாமிகள் (1804-1891), இந்தியாவின் பெங்களூர் நகரில் நீதிபதியாக இருந்த அவர் அப் பதவியினை துறந்து ஈழத்துக்கு வந்து யாழ்ப்பாணம் பெரிய கடை வீதிகளில் சித்துக்கள் புரிந்து அடியவரை ஆட்க்கொண்டார்.

கடையிற்சுவாமிகளின் அருட்கடாட்ச்சம் பெற்றவர் செல்லப்பாசுவாமிகள் (1840-1915), நல்லூர்த் தேரடியில் தவ வாழ்வு வாழ்ந்த செல்லப்பாசுவாமிகள் “ஒரு பொல்லாப்பும் இல்லை. எப்பவோ முடிந்த காரியம். நாம் அறியோம். முழுதும் உண்மை” எனும் நான்கு மகா வாக்கியங்களை அருளினார்.




செல்லப்பாசுவாமிகளின் பேரருள் பெற்றவர் மாமுனிவர் சிவ யோகசுவாமிகள் (1872-1964), கொழும்புத்துறை ஆச்சிரமத்தில் வாழ்ந்து, நற்சிந்தனை எனும் நல்லமுதம் அருளி, அடியவரை ஆற்றுப் படுத்தி, சைவ சமயம் உலகெங்கும் பரவ வித்திட்டவர் எங்கள் குருநாதன்.

யாழ்ப்பாணத்து மாமுனிவர் சிவ யோகசுவாமிகளின் கொழும்புத்துறை ஆச்சிரமத்துக்கு 1949 ஆம் ஆண்டு வைகாசிப் பெளர்ணமி (வைகாசி விசாகம்) தினத்தன்று ஓர் அமெரிக்க இளைஞர் வந்தார். அவரின் வருகையை எதிர்பார்த்திருந்த யோகசுவாமிகள் அவருக்கு “சுப்பிரமுனிய” எனும் நாம தீட்சை அளித்தார். அவரே எமது குருதேவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் (1927-2001), யோகசுவாமிகள் குருதேவருக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து அவரின் வாழ்வின் பணிகள் பற்றிய அறிவுரைகளையும் வழங்கினார்.




 யோகசுவாமிகள் குருதேவரின் முதுகில் ஓங்கிப் பலமாக அடித்து “இது அமெரிக்காவில் கேட்கும் இனி உலகெங்கும் சென்று சிங்கம் போல் கர்ச்சிப்பாய். நீ பல ஆலயங்களை அமைத்துப் பலருக்கு உணவளிப்பாய்” என ஆசி வழங்கினார். இந்த அடி குருதேவரை நாதசித்தர் மரபில் சேர்க்கும் தீட்சையாக அமைந்தது.




குருதேவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் மேலைத் தேசத்தில் முதலாவது சைவ கோயிலை ஶ்தாபித்ததோடு, ஹாவாய் சைவ ஆதீனத்தை நிறுவி, ஓர் துறவிகள் மரபினையும் உருவாக்கினார்.  உலகெங்கும் பல சைவ ஆலயங்கள் உருவாகுவதற்கும், பல அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் சைவ சமயத்தைத் தழுவுவதற்க்கு மூல காரணமாக விளங்குபவர் எனது குருதேவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் .




குருதேவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் சமாதியடையும் வேளையில் தனது துறவுச் சீடர்களில் முதன்மைச் சீடராகிய வேலன்சுவாமிகளை ஹாவாய் சைவ ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சன்னிதானமாக நியமித்து ஆசி வழங்கினார்.




சற்குரு போதிநாத வேலன்சுவாமிகள் (1942-) குருதேவரின் அருளாணைப்படி ஆதீன துறவியரையும், உலகெங்கும் பரந்து வாழும் அடியவர்களையும் ஆன்மீக வாழ்வில் ஆற்றுப்படுத்தி வருகிறார்.

“குருதேவர் திருவடிகள் வாழ்க”

Happy Guru Purnima. குரு பரம்பரையை போற்றுவோம்.

ஈழத்துச் சித்தர் பரம்பரையின் மூலகுருவானவர் கடையிற்சுவாமிகள் (1804-1891), இந்தியாவின் பெங்களூர் நகரில் நீதிபதியாக இருந்த அவர் அப் பதவியினை துறந்து ஈழத்துக்கு வந்து யாழ்ப்பாணம் பெரிய கடை வீதிகளில் சித்துக்கள் புரிந்து அடியவரை ஆட்க்கொண்டார்.

கடையிற்சுவாமிகளின் அருட்கடாட்ச்சம் பெற்றவர் செல்லப்பாசுவாமிகள் (1840-1915), நல்லூர்த் தேரடியில் தவ வாழ்வு வாழ்ந்த செல்லப்பாசுவாமிகள் “ஒரு பொல்லாப்பும் இல்லை. எப்பவோ முடிந்த காரியம். நாம் அறியோம். முழுதும் உண்மை” எனும் நான்கு மகா வாக்கியங்களை அருளினார்.

செல்லப்பாசுவாமிகளின் பேரருள் பெற்றவர் மாமுனிவர் சிவ யோகசுவாமிகள் (1872-1964), கொழும்புத்துறை ஆச்சிரமத்தில் வாழ்ந்து, நற்சிந்தனை எனும் நல்லமுதம் அருளி, அடியவரை ஆற்றுப் படுத்தி, சைவ சமயம் உலகெங்கும் பரவ வித்திட்டவர் எங்கள் குருநாதன்.

யாழ்ப்பாணத்து மாமுனிவர் சிவ யோகசுவாமிகளின் கொழும்புத்துறை ஆச்சிரமத்துக்கு 1949 ஆம் ஆண்டு வைகாசிப் பெளர்ணமி (வைகாசி விசாகம்) தினத்தன்று ஓர் அமெரிக்க இளைஞர் வந்தார். அவரின் வருகையை எதிர்பார்த்திருந்த யோகசுவாமிகள் அவருக்கு “சுப்பிரமுனிய” எனும் நாம தீட்சை அளித்தார். அவரே எமது குருதேவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் (1927-2001), யோகசுவாமிகள் குருதேவருக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து அவரின் வாழ்வின் பணிகள் பற்றிய அறிவுரைகளையும் வழங்கினார்.

 யோகசுவாமிகள் குருதேவரின் முதுகில் ஓங்கிப் பலமாக அடித்து “இது அமெரிக்காவில் கேட்கும் இனி உலகெங்கும் சென்று சிங்கம் போல் கர்ச்சிப்பாய். நீ பல ஆலயங்களை அமைத்துப் பலருக்கு உணவளிப்பாய்” என ஆசி வழங்கினார். இந்த அடி குருதேவரை நாதசித்தர் மரபில் சேர்க்கும் தீட்சையாக அமைந்தது.

குருதேவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் மேலைத் தேசத்தில் முதலாவது சைவ கோயிலை தாபித்ததோடு, ஹாவாய் சைவ ஆதீனத்தை நிறுவி, ஓர் துறவிகள் மரபினையும் உருவாக்கினார்.  உலகெங்கும் பல சைவ ஆலயங்கள் உருவாகுவதற்கும், பல அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் சைவ சமயத்தைத் தழுவுவதற்க்கு மூல காரணமாக விளங்குபவர் எனது குருதேவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் .

குருதேவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் சமாதியடையும் வேளையில் தனது துறவுச் சீடர்களில் முதன்மைச் சீடராகிய வேலன்சுவாமிகளை ஹாவாய் சைவ ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சன்னிதானமாக நியமித்து ஆசி வழங்கினார்.

சற்குரு போதிநாத வேலன்சுவாமிகள் (1942-) குருதேவரின் அருளாணைப்படி ஆதீன துறவியரையும், உலகெங்கும் பரந்து வாழும் அடியவர்களையும் ஆன்மீக வாழ்வில் ஆற்றுப்படுத்தி வருகிறார்.

“குருதேவர் திருவடிகள் வாழ்க”

“ஊரிலிருந்த என்னை உலகறியச் செய்து, ரிஷி தொண்டுநாதன் எனும் நாம தீட்ஷை தந்து, தொண்டு செய்யும் தவ வாழ்வு அருளிய என் குருதேவரின் திருவடிகளுக்கு என்றும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்” ~ அன்புடன் தொண்டுநாதன்


நன்றி  : சுவாமி  தொண்டுநாதன்

Thursday 2 July 2020

தமிழகப் பாறை ஓவியங்கள் || ஓர் அறிமுகம்



தொன்மையான ஓவியங்கள் உலகின் பல பகுதிகளில் இயற்கையாய் அமைந்துள்ள குகை மற்றும் பாறை ஒதுக்குகளில் கண்டறியப்பட்டுள்ளன. இக்கலை மரபை ஓவியங்கள் மற்றும் கற்செதுக்குகள் இரு வகைகளாக பிரித்துக் கொள்ளலாம். இந்தியாவில் பரவலான அனைத்து மாநிலங்களிலும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் மத்தியபிரதேச மலைக் குன்றுகளில் காணப்படுகின்றன. அது போல  தமிழகத்தில் பாறை ஓவியங்கள் பெரும்பாலும் குறிஞ்சி மற்றும் முல்லை நிலப் பகுதிகளிலுள்ள மலைகளில் புதிய கற்காலம், பெருங்கற்காலம் மற்றும் வரலாற்றுக்கால ஓவியங்கள் காணக்கிடைகின்றது.




தமிழகத்தில் காணப்படுகின்ற பாறை ஓவியங்கள் பெரும்பாலானவை சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களாகவே உள்ளன, இருப்பினும் சில இடங்களில் கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதே போல பெரும்பாலான இடங்களில் ஓவியங்கள் ஒரே நிறத்தில் வரையப்பட்டுள்ள. செத்தவரை, கரிக்கையூர் போன்ற சில இடங்களில் மட்டுமே இரண்டு நிறத்திலும் வரையப்பட்டுள்ளன, சில ஓவியங்களில் கோட்டோவியம் ஒரு நிறத்திலும், உடல் பகுதி வேறு நிறத்திலும் இருக்கும். தமிழகத்தில் பாறை ஓவியங்களில் அதிக அளவில் வெள்ளை நிறமும் அதற்கு அடுத்த நிலையில் சிவப்பு நிறமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொன்மையான ஓவியங்கள் சிவப்பு நிறத்தில் உள்ளன. இருப்பினும் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.





வெள்ளை நிறம், சுண்ணாம்பு கல் அல்லது வெள்ளை களிமண் போன்றவற்றில் இருந்து எடுக்கப்படிகின்றது. சிவப்பு நிறம், அடர் சிவப்பு, இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு போன்ற  பல்வேறு நிலைகளில் கிடைக்கின்றது. கீழ்வாலை, செத்தவரை, அழகர் கோவில், கீழவளவு போன்ற இடங்களில் ஓவியங்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன. ஒரமணகுண்டா, மகாராஜாக்கடை, மல்லசந்திரம் போன்ற இடங்களில் ஓவியங்கள் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளன. கரிக்கையூர், சேலகுறை, வெள்ளரிக்கோம்பை, வேட்டைகாரன்மலை(வெள்ளருக்கம்பாளையம்)  போன்ற இடங்களில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படுகின்றன. உசிலம்பட்டி, பழனி போன்ற பகுதிகளில் வெள்ளை மற்றும் கருப்பு நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஓவியங்கள் பெரும்பாலும் தனித்தனி நிறங்களால் தனித்தனியாகவே வரையப்பட்டுள்ளன. இருப்பினும் சில இடங்களில் ஒன்றன் மீது ஒன்றாக வரையப்பட்டுள்ளது. இவை காலத்தால் வேறுபட்டவையாக இருக்கும். இவை மயிலாடும்பாறை, கரிக்கையூர் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

பெரும்பாலான ஓவியங்களில், மாடுகள், மான்கள், குரங்குகள், குதிரைகள், யானைகள், சண்டைக்காட்சிகள், வேட்டைக் காட்சிகள், சடங்கு மற்றும் சமூக நிகழ்வுகள் அதிகம் காணப்படுகின்றன. அது போல கணிசமான அளவில் அடையாளங்களும், குறியீடுகளும் காணப்படுகின்றன. தமிழகத்தில் காணப்படும் பாறை ஓவியங்கள் ஒரே மாதிரி தன்மையில் இல்லாமல் கலைஞர்களுக்கு தகுந்தாற் போல் கருப்பொருளைத் தேர்வு செய்வதிலும், வெளிப்பாட்டு யுத்தியிலும் தனித்துவமாகவே உள்ளன.




பெருங்கற்கால சின்னங்கள் மற்றும் பல பாறை ஓவியங்களில் உள்ள மனித உருவங்கள் பொதுவாக குச்சி வடிவில் காட்டப்பட்டுள்ளன. மனித உருவ வடிவங்களின் அடிப்படைக் கூறுகளை எளிமைப் படுத்தி கோட்டுருவமாக தேவைக்குத் தகுந்தாற் போல் மனித உருவங்கள் வரையப்பட்டு வந்துள்ளன. இக்குச்சி வடிவங்கள் கை, கால், உடல்களோடு வில், அம்பு, கேடயம் மற்றும் பிற ஆயுதங்களை தாங்கியிருப்பது போல அமைக்கப்பட்டுள்ளன.

வட இந்தியாவில் இது போன்ற குச்சி வடிவ மனித உருவங்கள் Mesolithic period ஆக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதே சமயம் தமிழகத்தில் காணப்படும், இத்தகைய ஓவியங்கள் பெருங்கற்காலத்தைச் சார்ந்ததாக அறியப்படுகின்றன. இருப்பினும் சில ஓவியங்கள் பெருங்கற்காலத்துக்கு முந்தயதாகவும் கருதப்படுகின்றன.




எளிய வடிவில்மனித உருவங்களை கட்டமைத்து வரையும் முறை தமிழகமெங்கும் பரவலாக காணப்படுகின்றது. இம்மாதிரியான ஓவியங்களில் மனித உடல் இரண்டு முக்கோணமாகவோ அல்லது கோடுகளைக் கொண்டோ வரையப்படுகின்றது. சில சமயங்களில் இக்கோடுகள் தூரிகைகளால் வண்ணம் பூசி நிரப்பப்படும். பெரும்பாலான உருவங்களில்  காட்டப்பட்டுள்ள ஆடை மற்றும் ஆயுதங்களைக் கொண்டு அவர்கள் போர் வீரர்கள் அல்லது  வேட்டைக்காரர்களாக இருக்கக்கூடும் என கருதப்படுகின்றது.






உலகமெங்கும் எக்ஸ்–ரே (X-Ray) ஓவியங்கள் எனப்படும் ஓவிய முறையில் விலங்குகளின் உள் உறுப்புகளைக் காட்டும் முறை உள்ளது. தமிழகத்தில் அவை ஆலம்பாடி, செத்தவரை போன்ற இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகைய ஓவியங்கள் இரண்டு வகைப்படும். முதலாவதில், விலங்குகளின் உள் உறுப்புக்கள் தத்ருபமாக இருக்கும், இதனை வரையும் ஓவியர்கள் வரையப்படும் விலங்குகளின் உள்ளுறுப்புகள் குறித்த முழுமையான அறிவை பெற்றிருத்தல் வேண்டும். அது போல இரண்டாம்  வகையில், உள் உறுப்புக்களப் போன்ற வடிவங்கள் எளிமையாக்கப்பட்டு அலங்கார கோடுகள் போல உள்ளுறுப்புக்கள் காட்டப்பட்டிருக்கும். சில ஓவியங்கள் கர்ப்பமான விலங்குகளின் வயிற்றில் இருக்கும் குட்டிகளை காட்டும் விதமாகவும் வரையப்பட்டுள்ளன.

 செத்தவரையில் காணப்படும் ஒரு ஓவியம், விலங்கொன்றினை தீயில் வாட்டும் விதம் காட்டப்பட்டுள்ளது. இக்காட்சியின் மூலம் அக்காலத்தில் எவ்வாறு மக்கள் உணவினை சமைத்தார்கள் என தெரிய வருகிறது. பாறை ஓவியங்களில் அதிக எண்ணிக்கையில் குறியீடுகளும், சில அடையாளங்களும் காணப்படுகின்றன, மேலும், வடிவியல் (geometric)  சார்ந்த மற்றும் சாராத உருப்படிவங்கள் (patterns)பெருமளவில் பெருங்கற்கால சின்னங்களில் கிடைக்கின்றன. குறிப்பாக, ஏற்பெட்டு, கீழ்வாலை,  மல்லசந்திரம், திருமலை, புறாக்கல் மற்றும் சென்னராயன்பள்ளி போன்ற பாறை ஓவியங்களில் காணப்படும் சில குறியீடுகள் பெருங்கற்கால பானை ஒடுகளில் காணப்படும் கீறல்கள் போல உள்ளன.பெருங்கற்கால சின்னங்களில் காணப்படும் ஓவியங்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்திலே காணப்படுகின்றன. பெரும்பாலான பெருங்கற்கால ஓவியங்கள் தோற்றத்தில் ஒத்த தன்மையையே கொண்டுள்ளது. பெரும்பாலான கல்திட்டைகளில் முதலில்  மேற்குபுறச் சுவரிலே அதிக அளவில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. பின்னர் வடக்கு மற்றும் தெற்குபுறச் சுவர்களில் காணப்படுகின்றது. பெருங்கற்காலச் ஈமச்சின்னங்களில் காணப்படும் பாறை ஓவியங்களில் உள்ள குறியீடுகளும், காட்சிகளும் பெருங்கற்கால மக்களோடு தொடர்புடையதாக உள்ளது.

பாறை ஓவியங்களில் பொதுவாக கையில் வில்- அம்பு வைத்திருப்பவர்கள் ஒருவருக்கொருவர் எதிர் திசையில் இருப்பர். இதைப் போலவே வரலாற்றுக் காலத்தில் இப்பகுதியில் உருவாக்கப்பட்ட நடுகற்களும் இது போன்ற தோற்றத்தில் காணப்படுகின்றன.

சில சமயங்களில் வில்லிருந்து அம்பு வெளியேறும் தருணத்தைக் காட்டியுள்ளனர். அது போல குதிரை மீது வீரர்கள் செல்வது போன்ற காட்சிகள் அதிகம் காணப்படுகின்றது. சில சமயங்களில் குதிரை வீரர்கள் ஒரு கையில் கேடயமும் மற்றொரு கையில் குதிரையின் கடிவாளத்தை பிடித்திருப்பது போல உள்ளது. சில சமயங்களில் கையில் நீண்ட ஈட்டி போன்ற ஆயுதத்தை கையில் ஏந்திய வண்ணம் காட்டப்பட்டுள்ளது.

தமிழக பாறை ஓவியங்களில் பறவைகளும், மரங்களும், இறையுருவங்களும் மிக அரிதாகவே தென்படுகின்றன. அது போல யானை வேட்டை, புலி வேட்டை, மான் வேட்டை, பன்றி வேட்டை, உடும்பு வேட்டை போன்ற காட்சிகள் எண்ணிக்கையில் பரவலாக உள்ளன. ஆனால் மாடுகளை வேட்டையாடுவது மிக குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது. மேலும், மாடுகளை அடக்குதல், ஓட்டிச் செல்லுதல், மாடுகளின் எதார்த்த வாழ்க்கை ஆகியன அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கு வாழ்ந்த மனிதர்களுக்கும் மாடுகளுக்குமிடையேயான உறவுகள் புதிய கற்காலம் தொட்டே சுமூகமானதாக இருந்துள்ளது என அறிய முடிகிறது.

இது வரை தமிழகத்தில் கண்டுபிடித்த பாறை ஓவியங்களுக்கு கால நிர்ணயம் சரியாக கணிக்கவில்லை. ஆனால் பெரும்பாலான பாறை ஓவியங்கள் உள்ள இடங்களுக்கு அருகே புதிய கற்கால அல்லது பெருங்கற்கால எச்சங்கள் காணப்படுகின்றன. இவ்விடங்களுக்கு அருகே முறையான அகழாய்வுகள் செய்யப்படவில்லை. அவ்வாறு அகழாய்வுகள் செய்தால் அதில் கிடைக்கும் பொருட்களை பாறை ஓவியங்களோடு ஒப்பாய்வு செய்து காலத்தைக் கணிக்க முடியும். பாறை ஓவியங்கள் அது வரையப்பட்ட காலத்து மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கண்ணாடியாய் அமைந்துள்ளன.


நன்றி : தமிழ் இணைய கல்விக்கழகம்