Thursday 25 June 2020

திரையுலக பிரபலம் பறவை முனியம்மாவின் பிறந்தநாள் இன்று


தமிழ்த் திரைப்படங்களில் தூள் எனும் படத்தில் திரைப்படப் பாடகியாகவும், நடிகையாகவும் அறிமுகமானார்.காதல் சடுகுடு, பூ, தேவதையைக் கண்டேன் என இருபத்தைந்து திரைப்படங்களுக்கும் மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையாக நடித்துள்ளார்.இவர்  (25.06.1943) அன்று பிறந்தார்.

இவரது கலைச் சேவையைப் பாராட்டி, தமிழக அரசு, இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கியுள்ளது.


பறவை முனியம்மா தமிழ்த் திரைப்பட, நாட்டுப்புறப் பாடகி, மற்றும் நடிகையாவார். மதுரை மாவட்டத்திலுள்ள பரவை எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் பரவை முனியம்மா என்று அழைக்கப் பெற்றார். தமிழ்த் திரைப்படங்களில் தூள் எனும் படத்தில் திரைப்படப் பாடகராகவும், நடிகராகவும் அறிமுகமானார்.

தூள் படத்தில் இடம்பெறும் 'சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி' என்ற பாடல் இவரை தமிழகம் முழுவதும் அடையாளம் காட்டியது. இந்த பாடத்திற்கு பின்னர் ஒரு குணச்சித்திர நடிகையாகவும், பிரபல நாட்டுப்புற பாடகியாகவும் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார்.



பரவை முனியம்மா, மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை என்ற ஊரை சேர்ந்தவர், இவர் ஏராளமான கிராமிய பாடல்கள், சினிமா பாடல்கள் பாடியவர். சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். தமிழக அரசின் 'கலைமாமணி விருது' உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அவர், கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயனின் 'மான் கராத்தே' படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

திரைப்படங்கள்

  1.     தூள் (2003)                                            
  2.  காதல் சடுகுடு (2003)                           
  3.   உன்னை சரணடைந்தேன் (2003)
  4.  ஏய் (2004)
  5.  ஜெய்சூர்யா (2004)
  6.  என் புருசன் எதிர்வீட்டுப் பொண்ணு (2004)
  7.  கோவில் (2004)
  8.  சூப்பர் டா (2004)
  9.  தேவதையைக் கண்டேன் (2005)
  10. கண்ணாடிப் பூக்கள் (2005)
  11.   மான் கராத்தே (2014)



பரவை முனியம்மா உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு அவர் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 29. 03. 2020 அதிகாலை 2.30 மணிக்கு காலமானார்



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home